ரேமண்ட் சகாப்தம் மறைந்தது.. விஜய் பத் மரணம்..!

Vijaypat Singhania: மும்பையில் 87 வயதில் முன்னாள் ரேமண்ட் தலைவர் விஜய்பத் சிங்கானியா மரணம் அடைந்தார்.

Published on: March 29, 2026 at 11:18 pm

மும்பை, மார்ச் 29, 2026: மும்பையில் 87 வயதில் விஜய்பத் சிங்கானியா காலமானார். முன்னாள் ரேமண்ட் தலைவர் விஜய்பத் சிங்கானியா, மும்பையில் மரணம் அடைந்தார் என்று அவரது குடும்பம் தெரிவித்துள்ளது. அவருக்கு 87 வயது. அவரது மகன் கவுதம் சிங்கானியா, குழுமத்தின் தற்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், ட்விட்டர் எக்ஸ் தளத்தின் மூலம் அவரது மறைவுச் செய்தியை அறிவித்தார்.

அவரது இறுதி சடங்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றன. பத்ம பூஷண் விருது பெற்ற விஜய்பத் சிங்கானியா, விமானப் பயணத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

இவர், 2000 ஆம் ஆண்டு வரை இருபது ஆண்டுகள் ரேமண்ட் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். பின்னர் நிறுவனத்தின் பொறுப்பை மகன் கவுதத்திடம் ஒப்படைத்ததோடு, தனது 37 சதவீத பங்கையும் முழுமையாக மகனுக்கு மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் சுங்க வரி ரூ.10 குறைப்பு.. மத்திய அரசு நடவடிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com