Sitaram Yechury | டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்.
October 17, 2024
Sitaram Yechury | டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்.
Published on: September 12, 2024 at 4:21 pm
Sitaram Yechury | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஐ(எம்) கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை எம்பியுமான சீதாராம் யெச்சூரி இன்று (செப்.12, 2024) காலமானார். அவருக்கு வயது 72.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், கடுமையான சுவாசக் குழாய் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
சீதாராம் யெச்சூரி, 2015ஆம் ஆண்டு சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பிரகாஷ் காரத்தை தொடர்ந்து கட்சி பதவிக்கு வந்தார்.
1974 இல் இந்திய மாணவர் கூட்டமைப்பில் (SFI) சேர்ந்த யெச்சூரி, அடுத்த ஆண்டே கட்சியின் உறுப்பினரானார். இந்த நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு அவசரநிலையின் போது அவர் கைது செய்யப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com