Mani Shankar Son Arrest: திரைப்பட இயக்குனர் மணி சங்கரின் மகன், ஹைதராபாத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Mani Shankar Son Arrest: திரைப்பட இயக்குனர் மணி சங்கரின் மகன், ஹைதராபாத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Published on: March 5, 2026 at 12:08 pm
ஹைதராபாத், மார்ச் 5, 2026: திரைப்பட இயக்குநர் மணி சங்கரின் மகன், ஹைதராபாத்தில் போக்குவரத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது, கோபத்தில் போலீசாரை தடுக்கவும், ஹோம் கார்டை தாக்கவும் செய்ததாக புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் போக்குவரத்து சிக்னலில் சிக்கியபோது, போலீசாரின் பணியைத் தடுக்கவும், ஹோம் கார்டை தாக்கவும் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இயக்குநர் மணி சங்கரின் மகன் கைது செய்யப்பட்டார்.
நடந்தது என்ன?
இந்தச் சம்பவம் மார்ச் 1 அன்று நடந்தது. இயக்குநரின் மகன், 40 வயதான பிரேம் சங்கர், மின்சார காரை ஓட்டிக் கொண்டிருந்தார். வாகனத்தின் பேட்டரி காலியாகியதால், கார் ரோடு நம்பர் 2-இல் உள்ள சந்திப்பில், பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் நிலைய எல்லைக்குள் சிக்கியுள்ளது. கார் பிரதான சாலையில் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஒரு பெண் காவலர் மற்றும் ஹோம் கார்டு சம்பவ இடத்துக்கு வந்து வாகனத்தை நகர்த்த முயன்றனர். ஆனால் சங்கர் அதை அனுமதிக்காமல், ஹோம் கார்டை தள்ளியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: துபாயில் ஐடி பணி.. நடிகர் மம்முட்டியின் மகன்.. துல்கர் சல்மானின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com