ஏ.சி.சி மகளிர் ஆசிய கோப்பை.. நேபாளத்தை வீழ்த்திய இந்தியா!

ACC Women’s Asia Cup Rising Stars tournament: ஏ.சி.சி மகளிர் கோப்பை ஆட்டத்தில் நேபாளத்தை இந்தியா வீழ்த்தியது.

Published on: February 18, 2026 at 12:37 pm

புதுடெல்லி, பிப்.18, 2026: ஆசிய மகளிர் கோப்பை போட்டியில் இந்தியா அணி அபார வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில், தனுஜா கன்பார் சிறந்த வீராங்கனை விருதை தட்டிச் சென்றார்.

போட்டி விவரம்

இந்தப் போட்டியில் நேபாளம் முதலில் பேட்டிங் செய்து 18 ஓவர்களில் 78 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த நிலையில், 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. இந்த நிலையில், இந்தியா 79 ரன்கள் இலக்கை 7.5 ஓவர்களில் எளிதாக அடைந்தது. இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் போட்டியை பொறுத்தமட்டில், தொடக்க வீராங்கனை விரிந்தா தினேஷ் 39 ரன்கள் ஏடுத்தார். பிளேயர் ஆஃப் தி மேட்ச் ஆக இந்திய வீராங்கனை தனுஜா கன்பார் தேர்வானார். இந்த வெற்றி, இந்திய அணியின் அரையிறுதி பயணத்தை உறுதிப்படுத்தியது மற்றும் தொடரில் அவர்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா vs நெதர்லாந்து.. ஆன்லைனில் லைவ் ஆக பார்ப்பது எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com