புதுடெல்லி, பிப்.8, 2026: “பாரத் ரத்னா விருது வீர சாவர்க்கருக்கு வழங்கப்பட்டால் அதன் பெருமை மேலும் உயரும்” என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னா விருதை இந்துத்துவா வலதுசாரி சித்தாந்தவாதியான வீர சாவர்க்கருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக இது அமைந்துள்ளது.
அதாவது, பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத், “வீரசாவர்க்கருக்கு பாரத ரத்னா என்பது, இந்த விருதின் கௌரவத்தை உண்மையில் உயர்த்தும் என்று கூறியுள்ளார். ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடனான ஒரு கலந்துரையாடல் அமர்வின் போது பகவத் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அப்போது அவர் வயது குறித்தும் கேட்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே பகவத்துக்கும் கடந்த செப்டம்பரில் 75 வயது நிறைவடைந்தது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளன.
பரப்புரை குறித்து பகவத்
தொடர்ந்து பரப்புரை குறித்து பேசிய பகவத், “சரியான நேரத்தில், சரியான அளவில் பரப்புரை என்பது மழை போல் இருக்க வேண்டும்” என்றார். மேலும், அதிகப்படியான பரப்புரை அகங்காரம், அதீத புகழ் வழங்கும். இதில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ‘ராகுல் பாய் டூ பப்பூ’.. மாநில அரசியலுக்கு நோ? நவஜோத் சிங் சித்து புதிய ரூட்!
Kanimozhi MP on MK Stalin: தமிழ்நாட்டின் எஃகு மனிதர் மு.க ஸ்டாலின் என கனிமொழி எம்.பி பாராட்டியுள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியை என்.டி.ஏ.வின் கிளை செயலாளர்…
Russia University Attack: ரஷ்யாவின் பல்கலைக்கழகத்தில் கத்தியால் தாக்கப்பட்டப்பட்ட நிகழ்வில் இந்தியர்கள் 4 பேர் காயமுற்றனர்….
T20 World Cup: டி-20 கிரிக்கெட் போட்டியில் சனிக்கிழமை (பிப்.7, 2026) நடந்த ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது….
Bharat Ratna demand for VD Savarkar: “பாரத் ரத்னா விருது வீர சாவர்க்கருக்கு வழங்கப்பட்டால் அதன் பெருமை மேலும் உயரும்” என மோகன் பகவத் கூறியுள்ளார்….
Top 5 tax-saving ELSS funds: 2026ல் டாப் 5 இ.எல்.எஸ்.எஸ் வரிசேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….
U 19 World Cup: இளையோர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ ரூ.7.50 கோடி பரிசு அறிவித்துள்ளது….