சென்னை, ஜன.31, 2026: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்-தலைவர் மருத்துவர் ராமதாஸ் சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் கடந்த 29-ம் தேதி தனது குடும்பத்துடன் பெங்களூரு நாகர்பாவி பகுதிக்கு மகிழுந்தில் சென்றார்.
அப்போது கர்நாடக ரக்ஷண வேதிகா அமைப்பைச் சேர்ந்த டி.ஏ.தர்மராஜ கவுடா மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழி மறித்து மிரட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை அகற்றச் சொல்லி வற்புறுத்தி, கார் கண்ணாடியை உடைத்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
காரில் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் இருந்ததையும் பொருட்படுத்தாமல், அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்து, அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது அநாகரிகத்தின் உச்சமாகும்.
எனவே தனிமனித உரிமையைப் பறிக்கும் வகையிலும், இரு மாநில மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையிலும் செயல்பட்ட டி.ஏ.தர்மராஜ கவுடா மற்றும் அவருடன் இருந்த 4 நபர்கள் மீது கர்நாடக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
‘மேலும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் வருங்காலத்தில் இது போன்ற அநாகரிகச் செயல்கள் குறைய வழிவகுக்கும் என இந்த அறிக்கையின் வாயிலாக தமிழக, கர்நாடக அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்” எனவும் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 65 லட்சம் கம்மவர்கள்.. பிப்.8 ஸ்ரீபெரும்புதூரில் மாநாடு!
Border 2 worldwide box office collection Report: சன்னி தியோல், வருண் நடிப்பில் பார்டர் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது….
Rohit Shettys Mumbai Home: பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்….
Pramit Jhaveri to Tata Trusts: பிரமித் ஜாவேரி தனது பதவிக்காலம் முடிந்த நிலையில், டாடா டிரஸ்ட்ஸிலிருந்து விலகுகிறார். அவர் 2020 பிப்ரவரி 12 முதல் சர்…
Thol Thirumavalavans remarks about Tamil kings: தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? எனக் கேள்வியெழுப்பியுள்ள டி.டி.வி தினகரன், தொல்….
Thailand Masters quarterfinals: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் இஷராணி பாருவா, தென் கொரியாவின் சங் ஷுவோ யுன்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்….
TN Journalists Kidnapping Case: “கனிமக்கொள்ளையை படம் பிடித்த செய்தியாளர் கடத்தல் விவகாரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்