தமிழ்நாட்டில் 65 லட்சம் கம்மவர்கள்.. பிப்.8 ஸ்ரீபெரும்புதூரில் மாநாடு!

Conference of Kammavars in Tamil Nadu: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கம்மா சர்வதேச கூட்டமைப்பு (கே.ஜி.எஃப்) மாநாடு 2026, பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது.

Published on: January 31, 2026 at 3:24 pm

Updated on: January 31, 2026 at 3:35 pm

புதுடெல்லி, ஜன.31, 2026: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கம்மா சர்வதேச கூட்டமைப்பு மாநாடு 2026, பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு, புதுடெல்லி பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கம்மா சர்வதேச கூட்டமைப்பின் நிறுவனரும் தலைவருமான ஜெட்டி குசுமா குமார் மற்றும் அமைப்பின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

ஜெட்டி குசுமா குமார் பேட்டி

கம்மா சர்வதேச கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கம் உலகம் முழுவதும் உள்ள கம்மா சமூகத்தினரை ஒன்றிணைப்பதும், அவர்களின் பண்பாட்டு உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதும், அடையாளத்தை பாதுகாப்பதும், சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் மற்றும் வலிமையை வழங்குவதுமாகும்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தெளிவான நோக்கத்துடன் தனது பயணத்தை ஆரம்பித்தது. அதற்கு உலகளாவிய கம்மா சமூகத்திடமிருந்து கிடைத்த ஆதரவு மிகப் பெரிதாக இருந்தது. இன்று கம்மா சர்வதேச கூட்டமைப்பு, உலகம் முழுவதும் சுமார் 2.1 கோடி மக்களை கொண்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது; இது இந்திய மக்கள்தொகையின் சுமார் 1.5 சதவீதமாகும்.

இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜெட்டி குசுமா குமார், நாட்டில் வேகமாக நடைபெறும் சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள், ஒழுங்குபடுத்தப்பட்ட பங்கேற்பை மேலும் அவசியமாக்கியுள்ளதாக கூறினார்.

மேலும், “நாடு முழுவதும் பல சமூகங்கள் தங்களின் நலன்களை பாதுகாக்கவும், தொடர்ச்சியை உறுதி செய்யவும் பல்வேறு வழிகளை தேடிக் கொண்டிருக்கின்றன.
நமது சமூகத்தின் இருப்பை பாதுகாப்பதும், அதன் பங்களிப்புகளை அங்கீகரிப்பதும், எதிர்கால தலைமுறையை தலைமைத்துவப் பொறுப்புகளுக்கு தயார்ப்படுத்துவதும்தான் எங்கள் கவனம்,” என அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கம்மவர் சமூக மக்கள்

கம்மா மாநாட்டை நடத்துவதற்கான இயல்பான தளமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவில் அதிகமான கம்மவர் மக்கள் தொகை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இங்கு சுமார் 65 லட்சம் கம்மவர் மக்கள் வாழ்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. வேளாண்மை, பொது வாழ்வு, புதுமை, சமூக சீர்திருத்தம் போன்ற பல துறைகளில் முக்கிய பங்களிப்புகளை செய்த பொல்லினேனி முனுசாமி நாயுடு, ஜி.டி. நாயுடு, நாராயணசாமி நாயுடு போன்ற பல சிறப்பு மிக்க ஆளுமைகளை இந்த மாநிலம் வழங்கியுள்ளது.
மேலும், வீரபாண்டிய கட்டபொம்மனார், திருமலை நாயக்கர், மங்கம்மா, ரவெல்லா மற்றும் பெம்மசானி வம்சங்கள் போன்ற தலைவர்கள் மற்றும் அரச வம்சங்களின் வரலாற்றுப் பெருமையும் இந்தப் பகுதிக்கு உரியது.

அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து பேசுகையில், மதராஸ் மாகாணத்தின் முதல் முதலமைச்சராக இருந்த பொல்லினேனி முனுசாமி நாயுடு கம்மா சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்த போதிலும், கடந்த பல தசாப்தங்களாக தமிழ்நாட்டில் அந்த சமூகத்தின் அரசியல் பங்கேற்பு குறைந்துள்ளதாக குசுமா குமார் குறிப்பிட்டார்.

கம்மா சர்வதேச கூட்டமைப்பு நோக்கம்

கம்மா சர்வதேச கூட்டமைப்பு, உலகம் முழுவதும் உள்ள கம்மா, கம்மநாயுடு, சௌத்ரி உள்ளிட்ட அனைத்து கம்மா சமூகத்தினரையும், அவர்கள் வாழும் நாடுகளின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் ஒளிவிளக்காகவும், அதிகாரமளிக்கும் இயக்கமாகவும் திகழ்கிறது. பண்பாட்டு பெருமை, தொழில்முறை சிறப்பு, தொழில்முனைவோர் திறன் மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பொதுவெளியில் கூட்டணி விவாதம் கூடாது.. தி.மு.க.வினருக்கு ஆர்.எஸ் பாரதி உத்தரவு

சென்னையில் பரிதாபம்.. கிரிக்கெட் விளையாடிய ஐ.டி ஊழியர் உயிரிழப்பு! IT Employee Dies on Field

சென்னையில் பரிதாபம்.. கிரிக்கெட் விளையாடிய ஐ.டி ஊழியர் உயிரிழப்பு!

IT Employee Dies on Field : சென்னையில் கிரிக்கெட் விளையாடிய ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது….

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா மதிமுக? ஆர்.எஸ் பாரதி சூசகமான பதில்! RS Bharathi

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா மதிமுக? ஆர்.எஸ் பாரதி சூசகமான பதில்!

RS Bharathi : திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன….

திடீரென இடிந்து விழுந்த கோவில் கட்டுமான கட்டிடம்.. 5 பேர் உயிரிழப்பு Parbhani Temple Collapse

திடீரென இடிந்து விழுந்த கோவில் கட்டுமான கட்டிடம்.. 5 பேர் உயிரிழப்பு

Parbhani Temple Collapse : மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் அனுமன் கோவிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தபோது மண்டபம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்….

உடல் நலம் முதல் மன அமைதி வரை.. உடலைச் செழுமைப்படுத்தும் யோகா.. பிரதமர் நரேந்திர மோடி! International yoga day 2026

உடல் நலம் முதல் மன அமைதி வரை.. உடலைச் செழுமைப்படுத்தும் யோகா.. பிரதமர்

International yoga day 2026 : உடல் நலம் முதல் மன அமைதி வரை யோகா ஒருவரின் உடலை செழுமைப்படுத்துகிறது என கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி…

UPSC சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்.. முழு விவரம்! UPSC DAF Begins

UPSC சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்.. முழு விவரம்!

UPSC DAF Begins : UPSC சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு 2026-க்கான விரிவான விண்ணப்பப் படிவ (DAF) பதிவு செயல்முறை தொடங்கியுள்ளது….

Tamil News Updates June 21 2026:  எடப்பாடி பழனிச்சாமி திடீர் ஆலோசனை.. தமிழக அரசியலில் பரபரப்பு! EPS Slams TVK

Tamil News Updates June 21 2026:  எடப்பாடி பழனிச்சாமி திடீர் ஆலோசனை..

Tamil News Updates June 21 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com