விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு.. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
Baramati Plane Crash: மகாராஷ்டிராவில் நடந்த விமான விபத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை, ஜன.28, 2026: விஎஸ்ஆர் வெஞ்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தனியார் லியர்ஜெட் விமானம் பரமதி அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மகாராஷ்டிரா துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவருமான அஜித் பவார் மற்றும் விமானத்தில் இருந்த மற்ற நால்வரும் உயிரிழந்தனர்.
அஜித் பவார் பயணித்த லியர்ஜெட் 45 விமானம் காலை 7 மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது. ஆனால் அது 8:10 மணிக்கு புறப்பட்டது. 9:12 மணிக்கு விமான விபத்து நடந்ததாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் (ATC) தகவல் பெற்றது. இந்த நிலையில் இது விபத்து அல்ல என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்தக் கூற்றுகளை அஜித் பவாரின் உறவினரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவார் மறுத்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி-எஸ்சிபி) மூத்த தலைவர் சரத் பவார், தனது மருமகனும் மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததை அடுத்து ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தினார். மேலும், இந்த விபத்துக்கு தொடர்பான சதி குறித்த வதந்திகளை அவர் மறுத்தார்.
தனது முதல் எதிர்வினையில், என்சிபி-எஸ்சிபி மூத்த தலைவர் சரத் பவார், “சிலர் இந்தச் சம்பவத்தை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இதில் அரசியல் எதுவும் இல்லை. இந்த விமான விபத்து முற்றிலும் ஒரு விபத்தே. இந்தச் சம்பவம் துயரமானது என்றும், இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் சரத் பவார் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:நான் கரூர், நீங்க மதுரை.. என்னை பற்றி ஏன் பேசுறீங்க? தி.மு.க எம்.எல்.ஏ.வுக்கு ஜோதிமணி கேள்வி
Tamil Nadu person was attacked in Bengaluru: பெங்களூருவில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தனது கண்டனத்தை மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்….
Thol Thirumavalavans remarks about Tamil kings: தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? எனக் கேள்வியெழுப்பியுள்ள டி.டி.வி தினகரன், தொல்….
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.