உன்னோவ் பாலியல் வழக்கு; சிறையில் குல்தீப் சிங்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Kuldeep Singh Sengar bail: உன்னோவ் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பா.ஜ.க முன்னாள் நிர்வாகி குல்தீப் சிங் சேங்கருக்கு பிணை அளிக்க சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Published on: December 29, 2025 at 8:35 pm

புதுடெல்லி, டிச.29, 2025: 2017ஆம் ஆண்டில் நடந்த உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கில் குல்தீப் சிங் சேங்கர் கைது செய்யப்பட்டார். முன்னதாக போலீசாரின் விசாரணைக்கு ஏதுவாக இவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் சிறைத் தண்டனையை இடைநிறுத்தி உத்தரவிட்டது. இதற்கு எதிராக சி.பி.ஐ தரப்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படி, நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான விடுமுறை அமர்வு விசாரணைக்கு எடுத்தது.

இதில், நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி மற்றும் ஆகஸ்டின் ஜார்ஜ் மசீஹ் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டை எதிர்த்து சேங்காரிடம் பதில் கோரி நோட்டீஸ் அனுப்பினர்.
சிபிஐ சார்பில் ஆஜராகிய சட்டத்துறை துணைத் தலைமை அதிகாரி துஷார் மேத்தா, உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்துமாறு அமர்விடம் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : 2026 புத்தாண்டு கொண்டாட்டங்கள்.. டெல்லியில் சோதனை தீவிரம்!

இந்த வழக்கில் சட்ட ரீதியான முக்கியமான கேள்விகள் எழுகின்றன எனவும், இன்னும் விசாரணை தேவைப்படுவதாக அமர்வு தெரிவித்தது. இதையடுத்து, டிசம்பர் 23ஆம் தேதி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் சேங்கார் விடுவிக்கப்படக்கூடாது என்றும், வழக்கு நான்கு வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு

முன்னதாக, உன்னாவ்வழக்கில் ஆயுள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த சேங்காரின் தண்டனையை, ஏற்கனவே ஏழு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் சிறையில் இருந்ததாகக் கூறி, உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியது. எனினும், பாதிக்கப்பட்டவரின் தந்தையின் காவல் மரண வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால், சேங்கார் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சாந்தாலி மொழியின் சிக்கி எழுத்து நூற்றாண்டு விழா..ஜனாதிபதி பங்கேற்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com