ரயில் நிலைய குடிநீரில் இ.கூலி பாக்டீரியா? சி.ஏ.ஜி-யின் கவலைக்குக் காரணம் என்ன?

E. coli: ஆய்வு செய்யப்பட்ட ரயில் நிலையங்களில் 11% மட்டுமே அனைத்து அடிப்படை வசதி விதிமுறைகளையும் பூர்த்தி செய்துள்ளன. குடிநீரின் தரம், தாமதமாகும் பணிகள் மற்றும் அதிகரித்து வரும் புகார்கள் குறித்தும் சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டுகின்றன.

Published on: August 19, 2026 at 1:14 pm

புதுடெல்லி, ஆக.19, 2026: இந்தியத் தலைமைத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை, ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. ஆய்வு செய்யப்பட்ட நிலையங்களில் 11% மட்டுமே அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்துள்ளன. குடிநீர் மாதிரிகளில் இ.கூலி பாக்டீரியா கண்டறியப்பட்டிருப்பது பயணிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

89%-க்கும் அதிகமான நிலையங்களில் இருக்கைகள், கழிப்பறைகள், மின்விசிறிகள், வழிகாட்டிப் பலகைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரம், குடிநீர் இருப்பு மற்றும் மருத்துவ உதவி தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன. பயணிகளுக்கான வசதிப் பணிகளில் 59% தாமதமாகியுள்ளதோடு, ஒதுக்கப்பட்ட நிதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை 2019-20 முதல் 2023-24 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியது. அந்த காலத்தில், பயணிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. குடிநீரின் தரம் குறித்த குறைபாடுகள், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை நேரடியாக பாதிக்கும் வகையில் உள்ளது.

அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சீர்செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதில் சுமார் 20,000 இடங்களில் புதிய குடிநீர் கொள்கலன்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு அமைப்பை நிறுவுவதும் அடங்கும்.

இந்த நடவடிக்கைகள், பயணிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், ரயில் நிலையங்களில் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.
சி.ஏ.ஜி அறிக்கை, ரயில்வே நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்தியுள்ளதோடு, அவற்றை சரிசெய்யும் முயற்சிகளுக்கு வழிகாட்டியாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரயில்களில் அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில்கள்.. சோதனையை தீவிரப்படுத்தும் ஐ.ஆர்.டி.சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com