Piyush Goyal Chennai visit: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்; அ.தி.மு.க.விடம் எத்தனை தொகுதிகள் கேட்க வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
Piyush Goyal Chennai visit: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்; அ.தி.மு.க.விடம் எத்தனை தொகுதிகள் கேட்க வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

Published on: December 23, 2025 at 2:46 pm
சென்னை, டிச.23, 2025: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே பொதுக்கூட்டம், பேரணி என பரப்புரைகளை தொடங்கிவிட்டன.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை வந்துள்ளார். தமிழக பா.ஜ.க. பொறுப்பாளரான அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தேர்தல் பரப்புரை மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வியூகம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. மேலும், அ.தி.மு.க கூட்டணியில் எத்தனை சீட்டுகள் பெறுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பாஜக மாநில மையக்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது நிர்வாகிகளிடம் பியூஷ் கோயல் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆயத்தப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அந்த வகையில், அதிமுக உடன் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த பியூஷ் கோயல் ஆயத்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தி.மு.க.வை வீழ்த்த முடியாது.. பியூஷ் கோயலுக்கு தமிழக அரசியல் தெரியாது.. அமைச்சர் ரகுபதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com