Stone mine collapsed in UP: உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் கல் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 15 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது; மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
Stone mine collapsed in UP: உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் கல் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 15 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது; மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

Published on: November 16, 2025 at 12:19 pm
லக்னோ, நவ.16, 2025: உத்தரப் பிரதேச மாநிலத்தின் சோன்பத்ராவில் சனிக்கிழமை (நவ.15, 2025) கல் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. மேலும், சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார் 15 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இங்கு, மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இறந்தவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் தேசிய பேரிடர் நிவாரணப் படை உள்ளிட்ட நிவாரணக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. இந்தக் கல் குவாரி, சோன்பத்ராவில் உள்ள ஓப்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பில்லி மர்குண்டி சுரங்கப் பகுதியில் அமைந்துள்ளது.
அமைச்சர் பேட்டி
#WATCH | Sonbhadra, UP | Visuals from the spot where around 15 people are feared trapped after a stone mine collapsed yesterday in Sonbhadra. NDRF and SDRF teams are at the spot. One body has been recovered. Rescue operations are underway.
— ANI (@ANI) November 16, 2025
(Source: NDRF) pic.twitter.com/0l7E4JL3kc
சுரங்கம் இடிந்து விழுந்த நேரத்தில் சுமார் ஒரு டஜன் பேர் சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்றும் உத்தரப் பிரதேச அமைச்சர் சனிக்கிழமை தெரிவித்தார். மேலும், ம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தொழிலாளியின் கூற்றுப்படி, சுரங்கப் பகுதியில் சரிவு ஏற்பட்ட நேரத்தில் ஒன்பது கம்ப்ரசர்கள் அந்த இடத்தில் இயங்கி வந்தன, மேலும் ஒவ்வொரு கம்ப்ரசரிலும் ஒருவர் பணியமர்த்தப்பட்டிருந்தார் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அரசியலும் வேண்டாம்; குடும்பமும் வேண்டாம்.. லாலு மகளின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com