Amit Shah: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், பாட்னாவில் நிதீஷ் குமாரும் இருக்கிறார்கள்; இங்கு வாரிசுகளுக்கு இடம் இல்லை என லாலு பிரசாத் மற்றும் சோனியா காந்திக்கு தெரிவித்துள்ளார் அமித்ஷா.
Amit Shah: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், பாட்னாவில் நிதீஷ் குமாரும் இருக்கிறார்கள்; இங்கு வாரிசுகளுக்கு இடம் இல்லை என லாலு பிரசாத் மற்றும் சோனியா காந்திக்கு தெரிவித்துள்ளார் அமித்ஷா.

Published on: October 30, 2025 at 11:45 am
பாட்னா அக்டோபர் 30, 2025: உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் மாநிலம் தர்பங்காவில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பேசிளார். அப்போது, பாட்னா மற்றும் டெல்லியில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை என்றார். தொடர்ந்து, பேசிய அமித் ஷா, ‘லாலு பிரசாத் தனது மகனை முதலமைச்சர் ஆக்கவும், சோனியா காந்தி தனது மகனை பிரதமர் ஆக்கவும் நினைக்கிறார்கள். இவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பீகாரில் முதலமைச்சர் பதவியும், டெல்லியில் பிரதமர் பொறுப்பும் காலியாக இல்லை. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், பாட்னாவில் நிதிஷ் குமாரும் இருக்கிறார்கள்” என்றார்.
ஊழல் கூட்டணி
அமித் ஷா, காங்கிரஸ்- ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியை ஊழல்வாதிகள் என விமர்சித்துப் பேசினார். அதாவது, லாலு பிரசாத் மாட்டுத் தீவன ஊழல் மற்றும் வேலை வாய்ப்பு ஊழலில் ஈடுபட்டார். அவர் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்தது காங்கிரஸ். இன்று இருவரும் கூட்டணியாக இருக்கிறார்கள்” என்றார். மேலும், நாட்டுத் நலத்திட்டங்களில் இருந்து இருவரும் விலகி காணப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: பீகார் தேர்தல் வெற்றிக்கு ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.. பிரதமர் நரேந்திர மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com