மூளைக் காய்ச்சல்: சென்னையில் கர்ப்பிணி போலீஸ் மரணம்!

சென்னையில் பணியாற்றிய பெண் போலீஸ் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்தார்.

Published on: September 6, 2024 at 8:10 pm

Chennai | 26 வயதான கர்ப்பிணி பெண் போலீஸ் கான்ஸ்டபிள் மேனகா, மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி (கேஎம்சி) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரின் கணவர் சுகுமாரும் போலீஸில் பணிபுரிந்துவருகிறார். உயிரிழந்த மேனகாவுக்கு ஆக.29ஆம் தேதி டெங்கு அறிகுறிகள் இருந்துள்ளன.

இந்த நிலையில் அமைந்தகரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். பின்னர், அங்கிருந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக மேனகா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு டெங்கு பாதிப்புகள் இல்லை என்பது தெரியவந்தது. எனினும், அவருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேனகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேனகா 9 வார கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com