திராவிட மாடல் அரசின் தூக்கமும், துரோகமும் எப்போது களையும்? அன்புமணி ராமதாஸ் கேள்வி

“இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த களமிறங்கிய கர்நாடகம்: திராவிட மாடல் அரசின் தூக்கமும், துரோகமும் எப்போது களையும்?” என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: September 9, 2025 at 5:25 pm

சென்னை, செப்.9, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் இரண்டாவது முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் மேற்கொள்ளவிருக்கும் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அதற்கான பயிற்சிகளை நேற்று முதல் தொடங்கியிருக்கிறது.

கர்நாடக மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு காட்டும் அக்கறையும், தீவிரமும் பாராட்டத்தக்கவை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “கர்நாடகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் முதல் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அண்மைக்கால தரவுகளைத் திரட்டும் நோக்குடன் இரண்டாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் கர்நாடக அரசு மேற்கொள்ளவுள்ளது. 7 கோடி மக்கள் தொகை கொண்ட கர்நாடகத்தில் மொத்தம் 15 நாள்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படவுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “ஆனால், இங்கு தமிழ்நாட்டில்….?

பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்பவர்களின் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறியே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இல்லாத அதிகாரத்தைக் கூட போராடிப் பெற்று செயல்படுத்த வேண்டியது தான் மக்கள் நல அரசின் கடமை. ஆனால், திமுக அரசு இருக்கும் அதிகாரத்தைக் கூட பயன்படுத்த மறுக்கிறது. இதற்குக் காரணம்… தமிழகத்தில் யாருக்கும் சமூகநீதி கிடைத்துவிடக் கூடாது என்ற தீய எண்ணம் தான்.

கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக தனியாகவே ஒரு கணக்கெடுப்பை 63 நாள்களில் அம்மாநில அரசு நடத்தி முடித்துள்ளது. இவ்வளவையும் சுட்டிக்காட்டியும் கூட, மு.க.ஸ்டாலின் அரசு அசைந்து கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாததை விட பெரிய கொடுமை என்னவென்றால், சமூகநீதியில் அக்கறை இருப்பதைப் போல நடிப்பது தான்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் 3 முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு கிடைந்தது. முதல் இரு வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கும். ஆனால், மூன்று வாய்ப்புகளையும் சிதைத்து சமூகநீதியை குழிதோண்டி புதைத்தது திமுக அரசு தான். அத்தகைய சமூகநீதி பாவங்களை செய்த திமுக, இனியாவது சமூகநீதி துரோகத்தையும், தூக்கத்தையும் களைந்து விட்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : மல்லை சத்யா நிரந்தர நீக்கம்.. வைகோ பரபரப்பு அறிக்கை.. முழு விவரம்!

பொன்னியின் செல்வன் பாடல் காப்பியா? சிக்கலில் ஏ.ஆர். ரஹ்மான்.. ரூ.2 கோடி டெபாசிட் செய்ய உத்தரவு! AR Rahman

பொன்னியின் செல்வன் பாடல் காப்பியா? சிக்கலில் ஏ.ஆர். ரஹ்மான்.. ரூ.2 கோடி டெபாசிட்

AR Rahman: நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவில் பாடலில் பங்களிப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் ரூ.2 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது….

30 வயதில் நரை எட்டிப் பார்க்கிறதா? கூந்தல் கருகருவென வலிமையாக இருக்க வேண்டுமா? Amla

30 வயதில் நரை எட்டிப் பார்க்கிறதா? கூந்தல் கருகருவென வலிமையாக இருக்க வேண்டுமா?

Amla: 30 வயதுக்கு முன் வெள்ளை முடியா? நெல்லிக்காய் பயன்படுத்தி கருப்பு, வலுவான முடியைப் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்….

இந்தியாவில் ஜியோமி 17 சீரிஸ்.. விலை என்னவாக இருக்கும்? Xiaomi 17 Series

இந்தியாவில் ஜியோமி 17 சீரிஸ்.. விலை என்னவாக இருக்கும்?

Xiaomi 17 Series: செல்போன் நிறுவன அறிக்கைகளின் படி, ஜியோமி 17 சீரிஸ் இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்பட உள்ளது….

விரைவில் ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள்.. ஆன்லைனில் பார்ப்பது எப்படி? JEE Main 2026

விரைவில் ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள்.. ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

JEE Main 2026: ஜே.இ.இ. (JEE) முதன்மைத் தேர்வு 2026 முடிவு விரைவில் வெளியாகின்றன….

என்னை யாரும் கொல்லப் போவதில்லை.. ஆனாலும் பாதுகாவலர்கள் ஏன்? பிரியங்கா சோப்ரா விளக்கம்! Priyanka Chopra on security

என்னை யாரும் கொல்லப் போவதில்லை.. ஆனாலும் பாதுகாவலர்கள் ஏன்? பிரியங்கா சோப்ரா விளக்கம்!

Priyanka Chopra on security: தான் ரசிகர்களை மதிக்கிறேன். அதேநேரம் தனக்கு பாதுகாப்பு தேவை என நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்….

2026 மகா சிவராத்திரி.. பூஜை, விரத தினங்கள்.. முழு விவரம்! Maha Shivratri 2026

2026 மகா சிவராத்திரி.. பூஜை, விரத தினங்கள்.. முழு விவரம்!

Maha Shivratri 2026: மஹா சிவராத்திரி 2026 – சரியான தேதி மற்றும் பூஜை நேரம் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்….

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com