புதுடெல்லி, ஆக.26 2025: அடுத்த 40-50 ஆண்டுகள் பாரதிய ஜனதா ஆட்சிதான் என்பது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எப்படி தெரியும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
பீகாரில் ராகுல் காந்தி பரப்புரை
பீகார் மாநிலம் மதுபானி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக பேசிய அவர், “அமித் ஷாவின் பேச்சை பாருங்கள்.
அடுத்து 40-50 ஆண்டுகள் வரை பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் எனக் கூறுகிறார். இது அவருக்கு எப்படி தெரியும்? இதற்கும் வாக்கு திருட்டுக்கும் தொடர்பு உள்ளது. அமித் ஷாவின் கூற்று உங்களுக்கு வித்தியாசமாக இல்லையா? அது இயல்புக்கு மாறாக உள்ளது” என்றார்.
மேலும், “அடுத்த 40-50 ஆண்டுகள் வரை பா.ஜ.க ஆட்சிதான் என அவரால் எப்படி கூற முடியும்?” என்றும் ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து, “நான் பொய் கூறவில்லை; வாக்கு திருட்டுக்கு பின்னால் உள்ள உண்மை என்ன? அது மக்களுக்கு தெரிய வேண்டும்” என்றார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் பாரதிய ஜனதா மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டில், பாரதிய ஜனதா வாக்கு திருட்டில் ஈடுபடுகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : பிரமாண பத்திரம் or மன்னிப்பு.. ராகுல் காந்திக்கு சிக்கலான ‘வாக்கு திருட்டு’!
CM Vijay: முதலமைச்சர் விஜயின் லண்டன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….
Anbil Mahesh Poyyamozhi: தமிழகத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் (CCB) சோதனை நடத்தியது….
Rentomojo IPO: ரென்டோமோஜோ IPO பங்குகள் ஒதுக்கீடு செப்டம்பர் 15, 2026 அன்று இறுதி செய்யப்பட்டுள்ளது. IPO 72.88 மடங்கு சந்தாதாரர்களால் பதிவு செய்யப்பட்ட நிலையில், பங்குகள்…
A. Raja: வழக்கறிஞர் கார்த்தி அளித்த புகாரின் பேரில், ஏழு பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மீது சைதாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்….
Bajaj: பஜாஜ் ஹோல்டிங்ஸ் & இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் 2026-27 நிதியாண்டுக்கான முதல் இடைக்கால லாபப்பங்காக ரூ.65 ஒவ்வொரு பங்குக்கும் அறிவித்துள்ளது….
Unemployment rate in India: இந்தியாவின் வேலைவாய்ப்பு தரவுகள் படி, ஆகஸ்ட் 2026-இல் வேலைஇல்லா விகிதம் 5% ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்ததால், வேலைஇல்லா…