PMK party womens conference: பாட்டாளி மக்கள் கட்சி மாநாடு ஆக.10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
PMK party womens conference: பாட்டாளி மக்கள் கட்சி மாநாடு ஆக.10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Published on: August 9, 2025 at 9:40 am
சென்னை, ஆக.9 2025: பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் மாநாடு பூம்புகாரில் ஆக.10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில், தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மருத்துவர் ராமதாஸ்.
இது குறித்து கவிதை வடிவில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பெண்ணடிமை தீர்ந்து தன்னுரிமை பெற்றிட
வரதட்சணை என்னும் சமூகப் புற்றுநோய் நீங்கிட
ஆணுக்குப் பெண்ணிங்கே அனைத்திலும் நிகர் என உணர்த்திட
கவனமாய் பெண்கள் கல்வி பலக் கற்றிட
சுகத்திலும் சொத்திலும் சரி பங்கு அமைந்திட
பெண்களை இழிவு செய்யும் பேதரமைகளைக் களைந்திட
மூடநம்பிக்கை நீக்கி முற்போக்கு எண்ணம் மலர்ந்திட
வீட்டையும் நாட்டையும் வீறுகொண்டு காத்திட
அன்னையர் குலமே அணி திரண்டு வாரீர்!
அரிய கருத்துக்கள் சுவைத்திட பாரீர்!
புறப்பட்டு பூம்புகார் வாரீர்!” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “10.08.2025 ஞாயிறு புரட்சிக்கனல் ஏந்திடும் மகளிர் மாநாடு
காவிய திரு நகராம் பூம்புகாருக்கு குடும்பத்துடன் வாரீர்! வாரீர்!” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசு பள்ளிகளில் அதிகரித்து வரும் மர்மச் சாவுகள்.. உரிய விசாரணை தேவை.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com