Tirunelveli | திருநெல்வேலியில் சிறுமியிடம் அத்துமீறிய பழ வியாபாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Tirunelveli | திருநெல்வேலியில் சிறுமியிடம் அத்துமீறிய பழ வியாபாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
Published on: September 3, 2024 at 6:00 pm
Tirunelveli | 11 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக திருநெல்வேலியில் பழ வியாபாரி போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி டவுண் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பழ வியாபாரி முருகன். 50 வயதான இவர் பழக் கடை நடத்திவருகிறார். இந்தக் கடைக்கு பழம் வாங்க வந்த 11வயது சிறுமியிடம் இவர் அத்துமீறி நடந்துக்கொண்டதாக தெரிகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பழக வியாபாரி முருகன் போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: திருச்சுழி டிரைவர் கொலை: பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com