Arupkottai | திருச்சுழி அருகே டிரைவர் கொலையை கண்டித்து நடத்தப்பட்ட மறியல் போராட்டத்தில் பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
October 17, 2024
Arupkottai | திருச்சுழி அருகே டிரைவர் கொலையை கண்டித்து நடத்தப்பட்ட மறியல் போராட்டத்தில் பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
Published on: September 3, 2024 at 3:09 pm
Arupkottai | திருச்சுழி அருகே டிரைவர் ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இராமநாதபுரம் கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த காளிகுமார் என்ற 33 வயதான லோடு ஆட்டோ டிரைவர் திருச்சுழி அருகே கேத்தநாயக்கன் பட்டி விலக்கு அருகில் கொடூரமாக கொல்லப்பட்டார்.
பைக்கில் வந்த இருவர் இவரை அரிவாளால் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி தாக்கி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், இக்கொலையை கண்டித்து விருதுநகர் அருப்புக்கோட்டையில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த மறியல் போராட்டத்தின்போது பாதுகாப்புப் பணியில் நின்ற பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் திக் திக்.. மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ் ஏட்டு தலைமறைவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com