‘இது காங்கிரஸின் கருத்துக்கள் அல்ல’; காங்கிரஸ் அதிரடி அறிக்கை!

Congress on Pahalgam attack: மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்களின் கருத்துக்களே அதிகாரப்பூர்வமானவை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Published on: April 28, 2025 at 6:17 pm

Updated on: April 28, 2025 at 6:18 pm

புதுடெல்லி, ஏப்.28 2025: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளின் கருத்துக்கள் மட்டுமே கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் என்று இன்று (ஏப்.28 2025) காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் காங்கிரஸ், “காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC) ஏப்ரல் 24, 2025 அன்று கூடி, இரண்டு நாள்களுக்கு முன்பு பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 25, 2025 அன்று காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் கருத்துக்களை முன்வைத்தனர். சில காங்கிரஸ் தலைவர்கள் ஊடகங்களிடம் பேசி வருகின்றனர். அவர்கள் தங்களுக்காகப் பேசுகிறார்கள்; காங்கிரஸின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, “இந்த மிக முக்கியமான நேரத்தில், காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானம், ஸ்ரீ மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஸ்ரீ ராகுல் காந்தி ஆகியோர் வெளிப்படுத்திய கருத்துக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “இவர்களின் கருத்துக்களே இந்திய காங்கிரசின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல் குறித்து காங்கிரஸ் தலைவர்களின் கருத்து

அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை தரூர் மேற்கோள் காட்டி உளவுத்துறைக்கு ஆதரவாக சசி தரூர் பேசினார். அப்போது, “எந்தவொரு நாட்டிலும் ஒருபோதும் 100% உளவுத்துறை இருக்க முடியாது. வெற்றிகரமாக முறியடிக்கப்பட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றி நாம் ஒருபோதும் அறிய மாட்டோம்” என்றார்.

இதற்கிடையில், ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியிடமிருந்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்; பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com