1 கிலோ அரிசி, மட்டனில் பாய் வீட்டு ஆம்பூர் பிரியாணி: இப்படி செய்து பாருங்க!

Mutton biriyani in Ambur style| பாரம்பரியமிக்க ஆம்பூர் மட்டன் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Published on: September 1, 2024 at 5:54 am

Mutton biriyani in Ambur style| பாரம்பரியமிக்க ஆம்பூர் மட்டன் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

ஏலக்காய் -4
கிராம்பு -4
பட்டை – 2 துண்டு
பிரிஞ்சி இலை- 2
எலுமிச்சை- 1
ஊறவைத்து அரைத்த காஷ்மீர் மிளகாய்- 20 கிராம்
இஞ்சி பேஸ்ட் -100 கிராம்
பூண்டு பேஸ்ட்- 100 கிராம்
கொத்தமல்லி
புதினா
சீரக சம்பா அரிசி- 1 கிலோ
எண்ணெய்- கால் லிட்டர்
வெங்காயம் -400 கிராம்
தக்காளி -400 கிராம்
ஆட்டுக்கறி- 1 கிலோ
உப்பு – தேவையான அளவு
தயிர்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ அரிசிக்கு 3 லிட்டர் தண்ணீர் கொதிக்க வைக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதனுடன் ஏலக்காய், கிராம்பு, பட்டை மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து வறுக்க வேண்டும்.

பின்னர் இதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இதனுடன் ஊறவைத்து அரைத்த மிளகாய் டேஸ்டினை சேர்க்கவும். இதனுடன் மீண்டும் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

மேலும், ஒரு கைப்பிடி புதினா மற்றும் கொத்தமல்லி தலைகளை மற்றும் ஆட்டுக்கறியை சேர்த்து பத்து நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

பின்னர் இதனுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இந்த சமயத்தில் குழம்புக்கு தேவையான உப்பினை சேர்த்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தீயினை சிம்மில் வைத்து அரை மணி நேரம் கரியினை வேக விட வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த நீருடன் புதினா, கொத்தமல்லி இலை மற்றும் அரை மணி நேரம் ஊறவைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை கொதிக்க விட்டு அரிசி பாதி வெந்து வந்ததும் வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வடித்த அரிசியினை வெந்த கறி மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பு தீயை சிம்மில் வைத்து பழைய தோசை கல் மீது பிரியாணி பாத்திரத்தை வைத்து பத்து நிமிடம் தம் போட வேண்டும். பிரியாணி இருக்கும் பாத்திரத்தில் ஆவி வெளியேறாமல் இருக்க வெயிட்டினை வைக்க வேண்டும்.

தம் வைத்த பின்னர் மூடியினை அகற்றி பிரியாணியை மெதுவாக கிளறி விட வேண்டும். இப்போது சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி தயாராகி விடும்.

இதையும் படிங்க 5 நிமிடத்தில் தக்காளி சாதம்: செஃப் தாமு ஸ்டைலில் செஞ்சி அசத்துங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com