PM Modi | சத்ரபதி சிலை இடிந்து விழுந்த விவகாரத்தில் தலை வணங்கி மன்னிப்பு கேட்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
February 6, 2025
PM Modi | சத்ரபதி சிலை இடிந்து விழுந்த விவகாரத்தில் தலை வணங்கி மன்னிப்பு கேட்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
Published on: August 30, 2024 at 11:43 pm
PM Modi | பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30, 2024) மகாராஷ்டிரா மாநிலம் சென்றிருந்தார்.
தொடர்ந்து, ரூ.76,000 கோடி மதிப்பிலான வத்வான் துறைமுகம் மற்றும் இதர திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், பால்காரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.
அப்போது, சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் 17 ஆம் நூற்றாண்டின் மாமன்னர் சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்த விவகாரத்தில் மன்னிப்பு கோரினார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, “எனக்கும், எனது சகாக்களுக்கும், அனைவருக்கும் சிவாஜி மகாராஜ் ஒரு ராஜா மட்டுமல்ல, மரியாதைக்குரியவர். இன்று, நான் அவருடைய பாதத்தில் என் தலை வணங்குகிறேன். என் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க அக்டோபரில் மாநாடு; பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com