இந்திரா காந்தி சோசியலிஸ்ட் அல்ல; ராகுல் குழப்பவாதி: கங்கனா ரணாவத்

Kangana Ranaut |“ராகுல் காந்தி ஓர் குழப்பவாதி; தலைவருக்கு உரிய எண்ணமின்றி நாற்காலியை துரத்துகிறார்” என நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார்.

Published on: August 28, 2024 at 9:29 pm

Updated on: August 28, 2024 at 9:30 pm

Kangana Ranaut |“ராகுல் காந்தி ஓர் குழப்பவாதி; தலைவருக்கு உரிய எண்ணமின்றி நாற்காலியை துரத்துகிறார்” என நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார்.

நடிகையும், பா.ஜ.க எம்.பி.யுமான கங்கனா ரணாவத் இந்தியா டுடே ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தியை, “குழப்பவாதி” எனக் குறிப்பிட்டார்.
அதாவது, “ராகுல் காந்தி ஓர் குழப்பவாதி; அவரது பேச்சுகளிலும் நடத்தைகளிலும் குழப்பம் உள்ளது” என்றார்.

மேலும், “போதை மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” எனவும் கூறினார். தொடர்ந்து, “தலைவர் என்ற தீர்க்கமான எண்ணம் அவருக்கு இல்லை என்றே தோன்றுகிறது. அவர் ஒரு நாற்காலியை மட்டுமே துரத்துகிறார். ஒவ்வொரு முறையும் அவர் தனது பாதையை மாற்றுகிறார்” என்றார்.

இருப்பினும், இந்திரா காந்தியைப் பற்றிப் பேசுகையில், “தனது சித்தாந்தங்களும் அரசியலும் தனது தந்தை ஜவஹர்லால் நேருவின் கொள்கைகளிலிருந்து வேறுபட்டது” என்று ரணாவத் கூறினார். மேலும் இந்திரா காந்தி சோசியலிஸ்ட் அல்ல என்றும் கூறினார்.

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கங்கனா ரணாவத் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க கேரளத்தில் அடுத்த சலசலப்பு; செக்ஸ் புகார்: சிக்கலில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ

வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
ட்விட்டர் https://x.com/DravidanTimes
இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/dravidantimes/

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com