Tirunelveli: திருநெல்வேலியில் 1000க்கும் மேற்பட்ட எஸ்சி வன்கொடுமைகள் நடந்துள்ளதும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.11.30 கோடி இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.
Tirunelveli: திருநெல்வேலியில் 1000க்கும் மேற்பட்ட எஸ்சி வன்கொடுமைகள் நடந்துள்ளதும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.11.30 கோடி இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.
Published on: March 16, 2025 at 10:26 pm
திருநெல்வேலி, மார்ச் 16, 2025: திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி ரீதியான வன்முறையால் பாதிக்கப்பட்ட பட்டியல் சாதியைச் சேர்ந்த குறைந்தது 1,095 பேர், கடந்த நான்கு ஆண்டுகளில், 1989 பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் ரூ.11.30 கோடி இழப்பீடு பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.
அதாவது, கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.12.14 கோடியை அனுமதித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் 2021 முதல் 1,095 பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.11.30 கோடியை விடுவித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, 2021-2022 ஆம் ஆண்டில் சாதி வன்கொடுமைகளால் 302 பட்டியல் சமூகத்தினர் இழப்பீடு பெற்றுள்ளனர். மேலும், 2022-23 ஆம் ஆண்டில் 296 பேருக்கும், 2023-24 ஆம் ஆண்டில் 287 பேருக்கும், 2024-25 ஆம் ஆண்டில் 210 பேருக்கும் அரசின் இழப்பீட்டை பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், வழக்கறிஞர் இசக்கி பாண்டியன், பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான சாதி வன்முறையைக் குறைக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டின் அரசியல் தீர்க்கதரிசி மு.க ஸ்டாலின்.. சேகர்பாபு புகழாரம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com