Nayanthara: நயன்தாரா மலையாள சினிமாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இந்தப் படத்தில், 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மோகன்லால் மற்றும் மம்மூட்டி மீண்டும் திரையில் இணைகின்றனர்.
Nayanthara: நயன்தாரா மலையாள சினிமாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இந்தப் படத்தில், 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மோகன்லால் மற்றும் மம்மூட்டி மீண்டும் திரையில் இணைகின்றனர்.
Published on: February 10, 2025 at 11:53 am
Updated on: February 10, 2025 at 2:43 pm
மகேஷ் நாராயணனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்.எம்.எம்.எம் திரைப்படத்தின் மூலம் நடிகை நயன்தாரா மலையாள சினிமாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். தற்காலிகமாக எம்.எம்.எம்.எம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மோகன்லால் மற்றும் மம்மூட்டி இணைந்து நடிக்கின்றனர்.
இந்தப் படம், 16 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இணைவதைக் குறிக்கிறது. இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி, நயன்தாராவின் பிரம்மாண்டமான படப்பிடிப்பின் வீடியோவைப் பகிர்ந்து கொண்டது.
இந்த வீடியோவில் நயன்தாரா மம்மூட்டி, இயக்குனர் மகேஷ் நாராயணன் மற்றும் குழுவினருடன் நயன்தாரா அன்பாக உரையாடுவதைக் காட்டுகிறது. 2016 ஆம் ஆண்டு வெளியான புதிய நியமம் படத்திற்குப் பிறகு நயன்தாரா மம்மூட்டியுடன் மீண்டும் இணைகிறார்.
இந்தப் படத்தின் பூஜை விழா நவம்பர் 2024 இல் இலங்கையின் கொழும்பில் நடைபெற்றது. அதன் பின்னர், படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில், நான்கு முன்னணி நடிகர்கள் பங்கேற்கும் பல முக்கிய காட்சிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. இலங்கை, லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஹைதராபாத், டெல்லி மற்றும் கொச்சி உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இதையும் படிங்க : கோடிகளில் புரளும் மதகஜராஜா; 13 ஆம் நாள் வசூல் நிலவரம் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com