திருவண்ணாமலை மகா தீபம் : மலையேற பக்கதர்களுக்கு தடை

பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருவண்ணாமலை மகா தீபத்திற்கு மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

Published on: December 11, 2024 at 6:09 pm

Updated on: December 12, 2024 at 9:33 am

Tiruvannamalai Maga Deepam | திருவண்ணாமலையில் கடந்த 1ஆம் தேதி பெய்த கனமழையால் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து உலக பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா அன்று திருவண்ணாமலை உச்சியில் பக்தர்கள் ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிகமானோரை மலை மீது ஏற்ற கூடாது என நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, தீப மலையில் 500 மீட்டர் தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், கொப்பரை எடுத்துச் செல்லும் வழியிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும், கோவிலுக்குள் ஏற்றப்படும் பரணி தீபத்திற்கு 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க சபரிமலை சீசன் : சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு ; தென்னக ரயில்வே

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com