திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசன ஆன்லைன் டிக்கெட் விநியோகம் எப்போது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசன ஆன்லைன் டிக்கெட் விநியோகம் எப்போது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Published on: November 22, 2024 at 10:28 am
Tiruvannamalai karthika deepa darshan | திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்வு பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ம் தேதி நடக்கிறது. இந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இம்முறை ஆன்லைனில் டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்ட நெரிசல், பாதுகாப்பு காரணங்களுக்காக பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின்போது கோவிலுக்குள் பக்தர்கள் இதற்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் வினியோகிக்கப்படும். பரணி தீபத்தை காண 500 பேருக்கும், மகா தீபத்தை காண 1,100 பேருக்கும் ஆன்லைன் மூலம் அனுமதி டிக்கெட் வழங்கப்பட உள்ளது. ஆன்லைனில் உரிய கட்டணம் செலுத்தி, அனுமதி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.
பரணி தீப தரிசன நிகழ்வை காண வருபவர்கள் அதிகாலை 2.30 மணிக்கும், மகா தீபத்தை காண வருபவர்கள் பகல் 3.30 மணிக்கும் வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆன்லைன் டிக்கெட்டுகள் வருகிற 10 அல்லது 11- ந்தேதி விநியோகிக்கப்பட உள்ளது.
ஆன்லைன் டிக்கெட் பெற்றவர்களுடன், கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் 5,200 பேருக்கு பரணி தீபத்தை காணவும், 8 ஆயிரம் பேர் மகா தீபத்தை காணவும் அனுமதி வழங்கப்பட இருக்கிறது. உரிய உடற்தகுதி அடிப்படையில் 2 ஆயிரம் பேர் மலையேற அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க ‘ஜனநாயகம் எங்களின் டி.ஏன்.ஏ-வில் கலந்தது’: கயானா நாடாளுமன்றத்தில் மோடி உரை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com