பாகிஸ்தானில் மகள் தலையில் சி.சி.டி.வி பொருத்திய தந்தை: என்ன காரணம்?

pakistani cctv viral girl | பாகிஸ்தானில் உள்ள தந்தை ஒருவர் தனது மகளின் தலையில் சி.சி.டி.வி பொருத்தி உள்ளார். என்ன நடந்தது?

Published on: September 11, 2024 at 9:08 pm

Pakistani cctv viral girl | பாகிஸ்தானியர் ஒருவர் தனது மகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க, வழக்கத்திற்கு மாறான கண்காணிப்பு முறையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்த வினோதமான கண்காணிப்பு நுட்பம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தந்தைகள் தங்கள் மகள்களைப் பாதுகாக்க விரும்புவது வழக்கம் என்றாலும், இந்த குறிப்பிட்ட பாகிஸ்தானிய தந்தை தனது மகளின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராவை மகளின் தலையில் பொருத்தியுள்ளார்.

பெண்ணின் தலையில் பொருத்தப்பட்ட பெரிய சிசிடிவி கேமரா தற்போது வைரலாகிவருகிறது. இந்த நிலையில் பெண்ணை பேட்டியெடுப்பவர் ஒருவர், “உங்கள் தந்தை கேமராவை நிறுவுவதை எதிர்த்தீர்களா என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு அவர் இல்லை என்று பதிலளித்தார். மேலும், உங்களின் தந்தை பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்புகிறாரா என்று கேட்டபோது, ​​அவர் ஆம் என்று பதிலளித்தார். இந்த நேர்காணலுடன் சம்பந்தப்பட்ட பெண்ணும் தற்போது வைராகிவருகிறார்.

இதையும் படிங்க : ஜெர்மன் அருங்காட்சியகத்தில் அடைப்பட்டு கிடக்கும் பேரழகி: யார் இந்த எகிப்து ராணி நெஃபெர்டிட்டி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com