வங்கதேசத்தில் வீடு புகுந்து இந்து பெண் பாலியல் வன்புணர்வு; உள்ளூர் அரசியல்வாதி வெறிச்செயல்!

Hindu woman raped by local politician: வங்கதேசத்தில் இளம்பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் உள்ளூர் அரசியல்வாதி ஃபசூர் அலியை போலீசார் கைது செய்தனர்.

Published on: June 30, 2025 at 10:32 am

டாக்கா, ஜூன் 30 2025: வங்கதேசத்தில் இளம்பெண் வீடு புகுந்து கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் உள்ளூர் அரசியல்வாதி ஃபசூர் அலி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். உள்ளூர் வங்கதேச அரசியல்வாதி ஃபசூர் அலி என்பவரால் இந்துப் பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த மறுநாளே, டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தி தலைநகரின் தெருக்களில் திரண்டனர்.

போராட்டங்களில் ஒன்றின் காணொளியில், குற்றவாளிகள் மீது “நேரடி நடவடிக்கை” கோரி மாணவர்கள் கோஷமிட்டனர். இந்து பண்டிகை தினத்தில் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் வீடு புகுந்து உள்ளூர் அரசியல்வாதி பெண்ணை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் வங்கதேசத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்; என்ன நடந்தது?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com