Operation Sindoor: இந்தியாவும், பாகிஸ்தானும் போரை நிறுத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
Operation Sindoor: இந்தியாவும், பாகிஸ்தானும் போரை நிறுத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
Published on: May 8, 2025 at 10:10 am
நியூயார்க், மே 8 2025: ஏப்ரல் 22 அன்று 26 பேரைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது இடங்களில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதன்படி, இந்திய ஆயுதப்படைகள் புதன்கிழமை (மே 8 2025) துல்லியமான தாக்குதல்களை நடத்தின. ஆபரேஷன் சிந்தூர் என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை அதிகாலை 1.04 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை நீடித்தது.
இந்நிலையில், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோருடன் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் குறித்த விளக்க உரையில் உரையாற்றினர்.
அப்போது, பஹல்காம் தாக்குதலின் குற்றவாளிகள் மற்றும் திட்டமிடுபவர்களை நீதியின் முன் நிறுத்துவது அவசியம் என்று மிஸ்ரி கூறினார்.
9 பயங்கரவாத நிலைகள்
இந்த நிலையில், இந்திய ஆயுதப்படைகளால் குறிவைக்கப்பட்ட ஒன்பது பயங்கரவாத முகாம்கள் முசாபராபாத்தின் சவாய் நாலா முகாம் மற்றும் சையத்னா பெலால் முகாம், குல்பூர் முகாம், அப்பாஸ் முகாம், பர்னாலா முகாம், சர்ஜால் முகாம், மெஹ்மூனா ஜோயா முகாம், மர்காஸ் தைபா மற்றும் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுபான் ஆகியவை ஆகும்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரையொருவர் தாக்குவதை இப்போதே நிறுத்த வேண்டும் என்றார். இது குறித்து பேசிய ட்ரம்ப், ““இது மிகவும் மோசமானது. எனது நிலைப்பாடு என்னவென்றால், நான் இருவருடனும் நன்றாகப் பழகுகிறேன். இரண்டையும் நான் நன்கு அறிவேன், அவர்கள் அதைச் சரிசெய்து கொள்வதை நான் காண விரும்புகிறேன்.
அவர்கள் சண்டையை நிறுத்தப்படுவதை நான் காண விரும்புகிறேன்” என்றார். தொடர்ந்து, “அவர்கள் சண்டையை இப்போது நிறுத்த முடியும் என்று நம்புகிறேன். இது தொடர்பாக ஏதாவது உதவ முடிந்தால், நான் அங்கே இருப்பேன்” என்றார்.
இதையும் படிங்க : வெளிநாட்டு படங்களுக்கு 100 சதவீதம் வரி; டொனால்ட் ட்ரம்ப் அதிரடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com