அமெரிக்காவில் நீதிபதி சுட்டுக் கொலை: நீதிமன்ற வளாகத்தில் நடந்தது என்ன?

America | அமெரிக்காவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி கெவின் முல்லின்ஸை, மிக்கி ஸ்டைன்ஸ் என்பவர் சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Published on: September 20, 2024 at 10:30 pm

America | அமெரிக்காவில் கிழக்கு கென்டக்கி கவுண்டியை சேர்ந்த மிக்கி ஸ்டைன்ஸ் என்பவர் வியாழக்கிழமை பிற்பகல் நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். அப்போது, வாக்குவாதத்திற்குப் பிறகு மாவட்ட நீதிபதி கெவின் முல்லின்ஸை அவரது அறையில் சுட்டுக் கொன்றார் என்று போலீசார் தெரிவித்தனர்.

லெட்சர் கவுண்டி ஷெரிப், 43 வயதான மிக்கி ஸ்டைன்ஸ், நீதிபதி கெவின் முல்லின்ஸை சுட்டுக் கொன்ற பிறகு தன்னைத்தானே சுட்டுக்கொல்ல முயன்றுள்ளார். இந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தற்போது இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

தென்கிழக்கு கென்டக்கியில் உள்ள வைட்ஸ்பர்க்கில் உள்ள லெட்சர் கவுண்டி நீதிமன்றத்தின் உள்ளே இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் மதியம் 2.55 மணியளவில் நடந்துள்ளது. தற்போது, ஷெரிப் உள்ளூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க ட்ரம்ப் தனக்காக போராடுகிறார்; அமெரிக்க மக்களுக்காக அல்ல’- கமலா ஹாரிஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com