திருச்சிக்கு கிப்பன் விலங்கு கடத்தல்: மலேசியாவில் விமான பயணி கைது!

Kuala Lumpur: திருச்சிக்கு வெளிநாட்டு உயிரினங்களை கடத்த முயன்றதாக விமான பயணி ஒருவர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டார்.

Published on: April 22, 2025 at 5:50 pm

கோலாலம்பூர், ஏப். 22 2025: மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில், சோதனையின் போது இந்தியாவைச் சேர்ந்த ஒரு பயணியிடம் இருந்து அபூர்வ விலங்கான கிப்பன் கைப்பற்றப்பட்டது. கடத்தல் முயற்சிக்காக அந்த நபரை கைது செய்யப்பட்டார்.

இந்திய அதிகாரிகள், கைது செய்யப்பட்ட பயணியை குறித்த அடையாளம் வெளியிடவில்லை. கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டபோது, அவர் திருச்சிக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மலேசிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், இந்திய அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த வகையான கடத்தல் முயற்சிகள், உயிரியல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாடிக் ஏர் விமானத்தில் திருச்சிக்கு மூன்று ஆப்பிரிக்க ஸ்பர்டு ஆமைகள், நான்கு சுலவேசி வன ஆமைகள் மற்றும் ஏழு ஹார்லெக்வின் மானிட்டர் பல்லிகளை கடத்த முயன்றதற்காக 50 வயதான தென்காசியைச் சேர்ந்த நபர் ஒருவர் அதே விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதையும் படிங்க கனடாவில் இந்திய மாணவி மீது துப்பாக்கிச் சூடு.. பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com