M Appavu: சபாநாயகர் மு.அப்பாவு நடுநிலையோடு செயல்படுகிறார் என புகழாரம் சுட்டியுள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
M Appavu: சபாநாயகர் மு.அப்பாவு நடுநிலையோடு செயல்படுகிறார் என புகழாரம் சுட்டியுள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
Published on: March 17, 2025 at 1:40 pm
சென்னை மார்ச் 17 2025: சபாநாயகர் முஅப்பாவுக்கு எதிராக இன்று ( மார்ச் 17 2025) நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு செயல்படுகிறார் என புகழாரம் சூட்டியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
இது தொடர்பாக பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், ” சபாநாயகரின் செயல்பாடுகள் என்னை கவர்ந்தன; இதனால் நான் அவரை தலைவர் பதவிக்கு முன்மொழிந்தேன். சபாநாயகர் மு அப்பாவோ அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒன்றாகவே நினைக்கிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட பேரவை தலைவருடன் அன்போடு பேசுகின்றனர்.
இதயம் படிங்க: டாஸ்மாகில் ரூ.1000 கோடி தான் முறைகேடா? சீமான் பரபரப்பு கேள்வி
நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பேரவை தலைவரின் விதிமீறலால் கடந்த காலத்தில் வேதனைப்பட்டேன். அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை என்ன அருகதை இருக்கிறது என்ன யோக்கியதை இருக்கிறது என்றெல்லாம் பேசினார்கள்” என்றார்.
மேலும் அரசின் செயல்பாட்டை எதிர்க்கட்சியினர் செம்மைப்படுத்துகின்றனர் என கூறிய மு க ஸ்டாலின் அவர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் சபாநாயகரின் நடவடிக்கைகளால் சுதந்திர காற்றை இந்த பேரவை சுவாசிக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதயம் படிங்க: தமிழ்நாட்டின் அரசியல் தீர்க்கதரிசி மு.க ஸ்டாலின்.. சேகர்பாபு புகழாரம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com