கோவையில் பா.ஜ.க நிர்வாகி கொலை: 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்

கோவையில் திங்கள்கிழமை பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகி சதீஷ் படுகொலை செய்யப்பட்டார்.

Published on: August 28, 2024 at 7:38 pm

Updated on: August 28, 2024 at 7:52 pm

BJP activist Satishs murder case | கோயம்புத்தூர் ஆர்.எஸ் புரத்தில் திங்கள்கிழமை (ஆக.26, 2024) மாலை பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி சதீஷ் படுகொலை செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் ஆர்.ஜி தெருவைச் சேர்ந்தவர் சதீஷ். 28 வயதான இவர், பா.ஜ.க.வில் மாவட்ட இளைஞரணி பொறுப்பு வகித்து வந்தார். மேலும், நிதி நிறுவனம் ஒன்றில் கலெக்ஷன் வேலையும் செய்துவந்தார்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை அடையாளம் தெரியாத கும்பல் சதீஷை, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொன்றது.
இந்தச் சம்பவம் குறித்த ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இன்று 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், வேலுச்சாமி, சரவணன் மற்றும் கோகுல் ஆகியோர் ஆவார்கள்.

இதையும் படிங்க : நடிகை ரேகா நாயரின் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு: டிரைவரிடம் போலீஸ் விசாரணை

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வேலுச்சாமியின் மகனான பிரபு என்பவருக்கும் சதீஷ் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டில் இருந்து முன்பகை இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் சதீஷ் கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
ட்விட்டர் https://x.com/DravidanTimes
இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/dravidantimes/

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com