Shashikant MP: த.வெ.க தலைவர் விஜய் பேச்சில் ஆரம்பத்தில் இருந்தே குறைந்தப்பட்ச மாண்பு இல்லை எனக் கூறியுள்ளார் சசிகாந்த் எம்.பி
Shashikant MP: த.வெ.க தலைவர் விஜய் பேச்சில் ஆரம்பத்தில் இருந்தே குறைந்தப்பட்ச மாண்பு இல்லை எனக் கூறியுள்ளார் சசிகாந்த் எம்.பி
Published on: September 21, 2025 at 5:12 pm
ஆவடி, செப்.21, 2025: காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் சென்னையை அடுத்த ஆவடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பேச்சில் ஆரம்ப காலத்தில் இருந்தே குறைந்தப்பட்ச மாண்பு இல்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய சசிகாந்த், “அவருடைய (விஜய்) எண்ணத்தை வெளியில் வந்து சொல்லிக்கொண்டிருக்கிறார். அவருடைய எண்ணம், மற்றும் எந்தக் கொள்கையில் நிற்கிறார் என்பதில் இன்னமும் தெளிவில்லை” என்றார்.
மேலும், “ஆரம்பத்தில் இருந்தே அவருடைய பேச்சு, அரசியலில் ஒரு குறைந்தப்பட்ச மாண்பு இல்லாததை பார்க்க முடிகிறது. இதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டா்கள்” என்றார்.
இதையடுத்து வாக்கு திருட்டு பற்றி பேசிய சசிகாந்த் எம்.பி., “தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெறுகிறது. இதனை ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார். இதனை மக்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறோம். வரும் நாட்களில் இதுபோன்று நடக்க கூடாது” என்றார்.
இதையும் படிங்க : சிறுநீரகத் திருட்டு வழக்கு; அன்புமணி ராமதாஸ் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com