ஓய்வுதிய இயக்குநரகத்திற்கு மூடுவிழா நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது ; டிடிவி தினகரன்

ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக செயல்பட்டு வந்த ஓய்வுதிய இயக்குநரகத்திற்கு மூடுவிழா நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

Published on: November 17, 2024 at 2:56 pm

TTV Dhinakaran condemned DMK Gov | மறு சீரமைப்பு எனும் பெயரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான விரோதப் போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,“ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் தகவல் தொகுப்பு மையம் ஆகிய துறைகளை கருவூலக் கணக்குத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பதோடு, இரு துறை தலைவர்களின் பதவியையும் பறிக்கும் வகையிலான அரசாணையை தமிழக அரசின் நிதித்துறை பிறப்பித்திருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலக் கணக்குத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அரசாணை, பழைய ஓய்வூதியத் திட்டம் எனும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை எக்காலத்திற்கும் நிறைவேறாது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அறிவித்த ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றாத திமுக அரசு, தற்போது ஓய்வூதிய இயக்குநரகத்திற்கும் மூடுவிழா நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

சுமார் 7 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் ஏராளமான பிரச்னைகளுக்கு தீர்வு காண தனியாக இயக்குநரகம் இல்லாமல், கருவூல கணக்குத் துறையின் தலைவரே அதனையும் சேர்ந்து கவனிப்பார் என்ற தமிழக அரசின் அரசாணை எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

எனவே, மறுசீரமைப்பு எனும் பெயரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான விரோதப் போக்கை உடனடியாக கைவிடுவதோடு, ஓய்வூதிய இயக்குநரகத்திற்கு மூடுவிழா நடத்தும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையை உடனடியாக திரும்பப்பெற்று ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க பெண் போக்குவரத்து காவலர் மீது போதை ஆசாமி தாக்குதல் ; காவலர்களுக்கே பாதுகாப்பில்லை ; டிடிவி தினகரன் கண்டனம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com