மீண்டும் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர்; துணை முதலமைச்சர் உதயநிதி: தமிழக அமைச்சரவை மாற்றம்!

தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றப்பட்டது. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

Published on: September 29, 2024 at 5:30 pm

Tamil Nadu Cabinet reshuffle | தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றப்பட்டது. அமைச்சர்களாக இருந்த மனோ தங்கராஜ், கே.எஸ் மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன், எஸ்.எம் நாசர் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.ராஜேந்திரன், கோவி. செழியன் மற்றும் எஸ்.எம். நாசரும் தமிழக அமைச்சரவையின் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

துணை முதலமைச்சர் உதயநிதி

இவர்களுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (செப்.29, 2024) மாலை சென்னை ராஜ்பவனில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதில் செந்தில் பாலாஜி மற்றும் ஆவடி நாசர் ஆகியோர் ஏற்கனவே மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்கள் ஆவார்.

உதயநிதி ஏற்கனவே அமைச்சராக இருப்பதால் அவர் பதவி ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமையை (செப்.28, 2028) துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செழியனுக்கு உயர்கல்வி இலாகா வழங்கப்பட்டுள்ளது.

நாசர், சிறுபான்மையினர் நலன் மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கான அமைச்சராகவும், ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மே 7, 2021 அன்று பதவியேற்ற ஒரு வருடத்திற்குள், தமிழக அமைச்சரவை மாற்றம் கண்டது.

அப்போது, போக்குவரத்து அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனின் இலாகா விலக்கப்பட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், எஸ்.எஸ்.சிவசங்கருக்கு போக்குவரத்து இலாகாவும் வழங்கப்பட்டது. அதே ஆண்டு ஆண்டு டிசம்பரில், முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

முந்தைய மாற்றங்கள்

இந்த நிலையில், மே 2023 இல், அமைச்சரவை மேலும் மாற்றங்களுக்கு உட்பட்டது. டி.ஆர்.பி. ராஜா அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக சேர்க்கப்பட்டார், அதுவரை அந்த இலாகா தங்கம் தென்னரசு வசம் இருந்தது. பழனிவேல் தியாக ராஜன் வகித்து வந்த நிதி இலாகா தங்கம் தென்னரசு வசம் ஒப்படைக்கப்பட்டது.

பழனி வேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப இலாகா ஒதுக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப துறையை கவனித்துவந்த மனோ தங்கராஜ் பால்வளத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அந்தத் துறையை கவனித்துவந்த ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

சீமான் கையை பற்றிய உதயநிதி.. கவனம் ஈர்த்த திருமண விழா சந்திப்பு! Udhayanidhi - Seeman Meet

சீமான் கையை பற்றிய உதயநிதி.. கவனம் ஈர்த்த திருமண விழா சந்திப்பு!

Udhayanidhi – Seeman Meet : சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலினும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் ஒரே மேடையில் சந்தித்து கை…

உதயநிதி பாராட்டிய 2 திட்டங்கள்.. என்னென்ன தெரியுமா? Udhayanidhi Stalin

உதயநிதி பாராட்டிய 2 திட்டங்கள்.. என்னென்ன தெரியுமா?

Udhayanidhi Stalin : தமிழக எதிர்க்கட்சித் தலைவர் த.வெ.க. அரசை இரண்டு செயல்களுக்காக பாராட்டினார்….

வளர்ச்சித் திட்டங்கள் இல்லை.. ஆளுநர் உரை மீது உதயநிதி குற்றச்சாட்டு Tamil Nadu Assembly Session

வளர்ச்சித் திட்டங்கள் இல்லை.. ஆளுநர் உரை மீது உதயநிதி குற்றச்சாட்டு

Tamil Nadu Assembly Session : தமிழக வளர்ச்சி திட்டங்கள் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்….

நீங்கள் என்ன சுதந்திர போராட்ட தியாகியா? தி.மு.க.வுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி Minister Ramesh

நீங்கள் என்ன சுதந்திர போராட்ட தியாகியா? தி.மு.க.வுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி

Minister Ramesh: நீங்கள் என்ன சுதந்திர போராட்ட தியாகியா என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தி.மு.க.வை பார்த்து கேள்வியெழுப்பியுள்ளார்….

125 மருத்துவ சீட்களை இழக்கும் தமிழ்நாடு? உதயநிதி எச்சரிக்கை Udhayanidhi Stalin statement

125 மருத்துவ சீட்களை இழக்கும் தமிழ்நாடு? உதயநிதி எச்சரிக்கை

Udhayanidhi Stalin statement: தமிழ்நாடு 125 மருத்துவ இருக்கைகளை இழக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com