‘டெல்டாவில் நீரில் மூழ்கி அழுகும் பயிர்கள்; திமுக அரசின் அலட்சியப் போக்குக்கு கடும் கண்டனம்’: டி.டி.வி தினகரன்!

“டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழையால் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் நெற்பயிர்கள் – கால்வாய்களை முறையாக தூர்வாராமல் விவசாயிகளை துயரத்துக்குள்ளாக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என அ மா மு க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Published on: November 19, 2024 at 11:34 am

TTV Dhinakaran condemns DMK Gov | டெல்டா மாவட்டங்களில் கன மழை காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து வருவதாக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழையால் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் நெற்பயிர்கள் – கால்வாய்களை முறையாக தூர்வாராமல் விவசாயிகளை துயரத்துக்குள்ளாக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள தாளடி சாகுபடி பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடப்பாண்டில் ஏற்கனவே காவிரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் போதுமான பயனளிக்காத நிலையில், தற்போது ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தொடங்கிய தாளடி சாகுபடியும் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருப்பதால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தஞ்சை – நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாய்காலை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட நிர்வாகமும், வேளாண்மைத் துறையும் அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே, தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்க காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, கனமழை காரணமாக விளைநிலங்களில் தேங்கியிருக்கும் மழைநீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் பருவமழைக்கு முன்பாகவே கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இதையும் படிங்க சபரிமலை சீசன்: கன்னியாகுமரி பகவதி அம்மன் தரிசன நேரம் நீட்டிப்பு!

தி.மு.க அரசின் செயலின்மையை கண்டித்த சி.ஏ.ஜி.. மக்களும் விரைவில் பாடம் புகட்டுவர்.. அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss

தி.மு.க அரசின் செயலின்மையை கண்டித்த சி.ஏ.ஜி.. மக்களும் விரைவில் பாடம் புகட்டுவர்.. அன்புமணி ராமதாஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com