அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் உள்பட 4 பேர் கைது

Coimbatore | வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் பேராசிரியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Published on: September 1, 2024 at 2:57 pm

Coimbatore | வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் பேராசிரியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வால்பாறையில் உள்ள அரசு கலைக் கல்லூரி ஒன்றில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

அதாவது கல்லூரிக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்ற சமூக நலத்துறை அதிகாரிகளிடம் கல்லூரி மாணவிகள் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் வாக்குமூலங்கள் இரகசியமாக பெறப்பட்டன. தொடர்ந்து, அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக மகளிர் ஆணைய அதிகாரி கிருஷ்ணவேணியும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்த மாணவிகளின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டன.
விசாரணை முடிவில் கல்லூரி பேராசிரியர் உள்பட 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க தனிமையில் சந்திக்க தூண்டும் ஓரினச்சேர்க்கை டேட்டிங் ஆப்ஸ்: எச்சரிக்கும் நெல்லை டி.எஸ்.பி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com