NTK Seeman | 2026 சட்டப்பேரவை தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
NTK Seeman | 2026 சட்டப்பேரவை தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
Published on: September 20, 2024 at 5:41 pm
Seeman | 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. பின் நாட்களில் இந்த சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி 2024 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட்டது. சீமானுக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காதது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.
உரிய நேரத்தில் சின்னத்துக்கு விண்ணப்பிக்காததே கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காமல் போனதற்கு காரணம் என ஆளும் கட்சியினர் கூறினர். இந்த கலேபரங்களுக்கு மத்தியில் சீமானுக்கு மைக் சின்னம் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த சீமான், ” 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை” என்றார். மேலும் எனது எண்ணத்திற்கு ஏற்ப சின்னம் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆரின் தலைநகர் பகிர்வு திட்டம் குறித்தும் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: ‘கன்னியாகுமரியில் அணுக்கழிவு சுரங்கம்; அ.ம.மு.க ஒருபோதும் அனுமதிக்காது’: டி.டி.வி தினகரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com