‘காவிரி குறுக்கே ராசிமணலில் அணை; 50 முதல் 100 டி.எம்.சி நீர் சேமிப்பு’: சசிகலா

காவிரி ஆற்றின் குறுக்கே ராசிமணலில் அணைக் கட்டினால் 50 முதல் 100 டி.எம்.சி நீரை சேமிக்க முடியும் என சசிகலா கூறியுள்ளார்.

Published on: September 4, 2024 at 7:18 pm

Sasikala | காவிரி அற்றின் குறுக்கு ராசி மணலில் அணை கட்ட வேண்டும் என தமிழ்நாடு அரசை சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுத்துள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே ராசிமணல் பகுதியில் அணை கட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இதே கருத்தை வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினரின் நியாயமான கோரிக்கைக்கு எனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “கர்நாடகாவில் தொடங்கும் காவிரி ஆறு தமிழகத்தில் உள்ள டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. காவிரி நீரை பெரிதும் நம்பியிருக்கும் தமிழக டெல்டா விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு எப்போது காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடும் என எதிர்பார்த்து காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

தமிழக டெல்டா விவசாயிகளின் பாசன நீர் தேவையை கருத்தில் கொண்டு, மழைக்காலங்களில் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், ராசிமணல் அணை திட்டம் தற்போது மிகவும் அவசியமானதாக விளங்குகிறது.

தமிழக எல்லையான ராசிமணல் பகுதியில் தமிழக அரசு அணை கட்டினால் குறைந்த செலவில் 50 முதல் 100 டிஎம்சி வரையிலான தண்ணீர் தேக்கி வைக்க முடியும். குறிப்பாக மேகதாதுவிலிருந்து ராசிமணல் வரை உள்ள 60 கிலோ மீட்டர் பகுதியில் 40 கிலோமீட்டர் தொலைவிற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ராசிமணல் பகுதியில் அணை கட்டுவதினால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க  முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த அனுமதி: தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com