கம்யூனிஸ்ட் நல்லக்கண்ணுவுக்கு பாரத ரத்னா.. பிரேமலதா விஜயகாந்த்

Premalatha Vijayakanth: தோழர் ஆர். நல்லக்கண்ணுவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Published on: February 26, 2026 at 8:59 pm

சென்னை, பிப்.26, 2026: மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஆர். நல்லக்கண்ணுவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில் வைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் ஆர். நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அப்போது தோழர் ஆர். நல்லக்கண்ணுவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் நல்லகண்ணு; கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு” என்றார். மேலும், “நிச்சயமாக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” எனவும் மத்திய அரசை அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: பாரதிய ஜனதாவினர் அமைச்சர்களாககூட வருவார்கள்.. நயினார் நாகேந்திரன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com