Coimbatore hostel Attack: கோயம்புத்தூரில் விடுதி பெண்களை பின்தொடர்ந்து, காவலாளியை தாக்கிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Coimbatore hostel Attack: கோயம்புத்தூரில் விடுதி பெண்களை பின்தொடர்ந்து, காவலாளியை தாக்கிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Published on: February 11, 2025 at 5:15 pm
Updated on: February 11, 2025 at 11:55 pm
கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் உள்ள பணிபுரியும் பெண்கள் விடுதிக்குள் அடையாளம் தெரியாத ஒருவர் இரண்டு பெண்களைப் பின்தொடர்ந்து தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம், திங்கட்கிழமை நள்ளிரவு 12.45 மணியளவில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கோவை விடுதி உரிமையாளர்கள் சங்கம், நகர காவல் ஆணையரிடம் உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளது.
அன்றைய தினம், இரண்டு பெண்களைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் காவலாளியைத் தாக்கி காயம் ஏற்படுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு விடுதி உரிமையாளர் சரவணம்பட்டி போலீசாருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர். திங்கட்கிழமை காலை, சங்கம் காவல் ஆணையர் ஏ. சரவண சுந்தரை நேரில் பார்த்து இது குறித்து புகார் தெரிவித்தது .அவரது தலையீட்டிற்குப் பிறகு, போலீசார் இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த நபர், பெண்கள் விடுதிக்குத் திரும்பிச் செல்லும்போது அவர்களைப் பின்தொடர்ந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பாதுகாவலரைத் தாக்கி விடுதிக்குள் நுழைய முயன்றார் என்றும் பெண்கள் அலறியதால் அங்கிருந்து அவர் ஓடிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. விடுதி பெண்களை இளைஞர் பின்தொடர்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க : திருப்பூரில் மாணவிகளுக்கு தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com