Ramadoss: அரியலூர் வரும் பிரதமர் நரேந்திர மோடி சோழர்களின் வாரிசுகளை சந்தித்து சிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ்.
Ramadoss: அரியலூர் வரும் பிரதமர் நரேந்திர மோடி சோழர்களின் வாரிசுகளை சந்தித்து சிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ்.
Published on: July 25, 2025 at 10:19 pm
சென்னை, ஜூலை 25 2025: பிரதமர் நரேந்திர மோடி சோழர்களின் வாரிசுகளை சந்திக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தேவிக்கோட்டை சோழகன் பற்றி ஜி.எஸ் ஸ்ரீநிவாஸாச்சார்யார் எம்.ஏ. அவர்களால் எழுதப்பட்டு 1943-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட History of Gingee, chapter 1 என்ற நூலில் 103-ம் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“சோழகனின் வாரிசுகள் தற்போது குறுநில உடைமையாளர்களாகிவிட்டனர் என்றும், சோழகர்களின் தலைவரே தற்போது பிச்சாவரம் பாளையக்காரராக திகழ்கிறார் என்றும், இவர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் முடிசூடும் உரிமை பெற்றவர்களாக திகழ்கின்றனர்” என்றும் அவர் எழுதியுள்ளார்.
தேவிக்கோட்டைக்கும் பிச்சாவரத்திற்கும் நடைபயண தூரம்தான். தேவிக்கோட்டையில் வசித்த சோழர்களே பிச்சாவரத்திலும் வசித்துள்ளனர். பிச்சாவரத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றின் மூலம் கி.பி.1583-ல் விட்டலேசுர சோழகோனார் என்பவர் பிச்சாவரத்தில் அரசாட்சி செய்துவந்தது தெரியவருகிறது. இவர் மீது சந்தமாலை பாடப்பட்டதை, திருக்கைவளம் என்ற நூலின் மூலம் அறியலாம்” என்றார்.
தொடர்ந்து, “1908-ஆம் ஆண்டு சாமிதுரை சூரப்ப சோழனாருக்கும், 1911-இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனாருக்கும், 1943-இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனாருக்கும், 1978-இல் சிதம்பரநாத சூரப்ப சோழனாருக்கும் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சோழ அரசராக முடிசூட்டியுள்ளனர்.
இவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும், மூன்றாம் ராஜேந்திர சோழனோடு (1246-1279) சோழர் ஆட்சி முடிந்துவிட்டதாக ஒரு தவறான கருத்து நிலவுகிறது. அந்த காலகட்டத்திற்கு பிறகும் சோழர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பதை மதுராவிஜயம் என்ற நூலும், மேலே சொன்ன ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன.
தற்போது, பிச்சாவரம் பாளையக்காரர்களாக அறியப்படும் (வன்னியர் குல சத்திரியர்) குடும்பத்தினர்தான் சோழர்களின் வழித்தோன்றல்கள். எனவே சோழர்களின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தரும் பிரதமர் அவர்கள், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பிச்சாவரம் சோழர் குடும்பத்தினரை கௌரவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தமிழக மக்கள் உரிமை மீட்பு.. அன்புமணியின் சுற்றுப்பயணம் முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com