TNPSC Sunil Kumar| தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக சுனில் குமாரின் நியமனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
February 6, 2025
TNPSC Sunil Kumar| தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக சுனில் குமாரின் நியமனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Published on: August 29, 2024 at 3:44 pm
TNPSC Sunil Kumar| தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக சுனில் குமாரின் நியமனத்தை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு சமீபத்தில் சுனில் குமாரை தலைவராக நியமித்தது. இதனை எதிர்த்து, அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், நியமனத்திற்கு முறையான விதிகள் பின்பற்றப்படவில்லை எனவும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீறி நியமனம் மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் 16 டிஜிபி அதிகாரிகள் இருப்பதால், ஓய்வு பெற்ற டிஜிபியை நியமிப்பது, பணியில் உள்ள அதிகாரிகளின் உரிமையை பறிக்கும் செயல் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, முன்னாள் தலைவராக இருந்த சீமா அகர்வாலைப் அகற்றிய பின்னர், செயற்கை காலியிடத்தை உருவாக்கி சுனில் குமாரை நியமித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சுனில் குமாரின் நியமனத்தை ரத்து செய்யவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர்: வேளச்சேரி எம்.எல்.ஏ தேர்வு
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
ட்விட்டர் https://x.com/DravidanTimes
இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/dravidantimes/
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com