ஜாமீன் கோரி பாதிரியார் ஜான் ஜெபராஜ் நீதிமன்றத்தில் மனு.. அவர் மீதான புகார் என்ன?

Pastor John Jebaraj files bail plea: பிரபல கிறிஸ்தவ பாதிரியார் ஜான் ஜெபராஜ் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் பிரிந்திருக்கும் அவரது மனைவி தூண்டுதலின் பெயரை பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Published on: May 9, 2025 at 3:20 pm

சென்னை மே 9 2025; தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். கிறிஸ்தவ பாதிரியான இவர் கோவையில், கிங் ஜெனரேஷன் பிரார்த்தனை கூடம் என்ற ஒன்றை நடத்தி மத போதனைகள் அளித்து வந்தார்.

இந்த நிலையில் இவர் மீது இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டப்பிரிவையின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

இந்த நிலையில் பாதிரியார் ஜான் ஜெபராஜ் தலைமுறைவானார். முன்னதாக அவர் பேசிய ஆடியோ ஒன்று பெரும் வைரலானது. இதற்கிடையில் கேரளாவில் பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜ் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மீண்டும் ஜாமின் மனு

இந்த நிலையில் பாதிரியார் ஜான் ஜெபராஜ் தனக்கு ஜாமீன் கோரி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ” பிரிந்து வாழும் எனது மனைவி மற்றும் உறவினர்களின் அழுத்தம் காரணமாக என் மீது பொய்யான வழக்கு பதியப்பட்டுள்ளது.இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக முழு ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக உள்ளேன். ஆகவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட் நீதிபதி விக்டோரியா கௌரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக போலீசார் பதில் அளிக்க கோரி வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: ஈரோட்டில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; டி.டி.வி தினகரன் கடும் கண்டனம்!

வங்கதேசத்தில் வீடு புகுந்து இந்து பெண் பாலியல் வன்புணர்வு; உள்ளூர் அரசியல்வாதி வெறிச்செயல்!
Hindu woman raped by local politician

வங்கதேசத்தில் வீடு புகுந்து இந்து பெண் பாலியல் வன்புணர்வு; உள்ளூர் அரசியல்வாதி வெறிச்செயல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com