Edappadi Palaniswami: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எம்ஜிஆர் திரைப்படம் நீக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Edappadi Palaniswami: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எம்ஜிஆர் திரைப்படம் நீக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: January 2, 2026 at 9:13 pm
சென்னை, ஜன 2, 2025: தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலிருந்து மறைந்த முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவன தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிராக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இன் ரசிகர்களும், அதிமுகவின் தொண்டர்களும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படத்தை நீக்க நினைத்தால்….
இந்த நிலையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி,” புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் புகைப்படத்தை நீக்கிவிட்டால் அவரது புகழை அளித்து விடலாம் என நினைப்பது கடும் கண்டனத்துக்குரியது; புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் புகழை அளிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எம்ஜிஆரின் புகைப்படத்தை உடனடியாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்” எனவும் தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க; திராவிட மாடல் தமிழ்நாட்டின் பொற்காலம்.. சொல்கிறார் வைகோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com