ஆன்மிக குரு, ‘மகா விஷ்ணு’ கைது; 5 பிரிவுகளில் வழக்கு: செப்.20 வரை நீதிமன்ற காவல்!

Maha Vishnu | பிரபல பேச்சாளர் மகா விஷ்ணு சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Published on: September 7, 2024 at 3:44 pm

Updated on: September 7, 2024 at 10:57 pm

Maha Vishnu | மகாவிஷ்ணுவின் பேச்சில் சர்ச்சை எழுந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று (சனிக்கிழமை) சென்னை விமான நிலையம் வந்தார். அவரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். அரசு பள்ளியில் நடந்த ஊக்குவித்தல் நிகழ்ச்சியில் முற்பிறவி கர்மா குறித்து மகா விஷ்ணு பேசினார்.

அப்போது மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் ஏன் பிற்போக்குத்தனமாக கருத்துக்களை பேசுகிறீர்கள் என கேள்வியெழுப்பினார். அதற்கு மகா விஷ்ணு, “உங்கள் பெயர் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா? என பதில் கேள்வியெழுப்பினார். தொடர்ந்து இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் பள்ளிகளில் பிற்போக்கு கருத்துக்களை பேசுகிறார் என்றும் மாற்றுத்திறனாளிகளின் மனம் புண்படும்படி பேசுகிறார் என்றும் புகார்கள் எழுந்தன.

இந்தப் புகார்கள் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். இதற்கிடையில் மகா விஷ்ணு கைது நடவடிக்கைக்கு பயந்து மாயமாகிவிட்டார் என்ற செய்திகள் வெளியாகின. அப்போது ஆஸ்திரேலியாவில் இருந்து பேசிய மகா விஷ்ணு, தாம் தற்போது ஆஸ்திரேலியாவில் சொற்பொழிவில் இருக்கிறேன்; நாளை (செப்.7,2024) சென்னை வருகிறேன்” என்றார்.

வழக்கு- நீதிமன்ற காவல்

சொன்னபடியே இன்று (செப்.7,2024) மாலை சென்னை விமானத்தில் வந்திறங்கிய அவரை தமிழக போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் பேச்சாளர் மகா விஷ்ணுவை காவலர்கள் எங்கு வைத்து விசாரிக்கின்றனர் என்ற விவரம் வெளியே வராமல் இருந்தது.
இந்த நிலையில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பேச்சாளர் மகா விஷ்ணுக்கு செப்.20ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் தரப்பில் பல்வேறு இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க  தலைமை ஆசிரியருக்கு பதில் அமைச்சரை மாற்ற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com