‘அமெரிக்காவில் இருக்கிறேன் என்ற உணர்வே இல்லை’: மு.க. ஸ்டாலின்

‘அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள்” என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published on: September 2, 2024 at 10:24 am

M K Stalin in America | “தங்களது உழைப்பாலும் – அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
உலக முதலீடுகளை ஈட்டுவதற்காக மு.க. ஸ்டாலின் ஆக.27ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

அமெரிக்காவில் மு.க. ஸ்டாலின் 17 நாள்கள் தங்குவார். கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.
மேலும், செப்.7ஆம் தேதி அயலக தமிழர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த நிலையில் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள்!
தங்களது உழைப்பாலும் – அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சான்பிரான்சிஸ்கோவில் கோடிகளில் முதலீட்டை அள்ளிய மு.க ஸ்டாலின்: 4100 பேருக்கு வேலை உறுதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com