நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனன் மறைவுசமூகநீதிக்கு பேரிழப்பு; அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss: நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனன் மறைவு சமூகநீதிக்கு பேரிழப்பு எனத் தெரிவித்துள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசு மரியாதையுடன்
இறுதிச் சடங்குகளை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Published on: June 6, 2025 at 8:36 pm

சென்னை, ஜூன் 6 2025: நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனன் மறைவு குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனன் காலமானார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த நீதியரசர் ஜனார்த்தனன் அவர்கள் கடுமையான உழைப்பால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தவர். 1988&ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியவர்.

வன்னியர் மற்றும் அருந்ததியர் இடஒதுக்கீடு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக 2006&ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட அவர், 2015&ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார். இவரது பரிந்துரையின் அடிப்படையில் தான் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு, கிறித்தவர்கள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் இட ஒதுக்கீடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன. வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீட்டை பரிந்துரைத்தவரும் இவர் தான்.

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஒருவர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். சமூகநீதி வரலாற்றில் தமது முத்திரையை மிகவும் ஆழமாக பதித்தவர் இவர். நீதியரசர் ஜனார்த்தனத்தின் மறைவு சமூகநீதித்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், நீதித்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதிக்கு அவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்த தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது? அன்புமணி ராமதாஸ் கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com